சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சானிடைசர் திரவம் அன்பளிப்பு

Singapore workers donation
(Photo: ItsRainingRaincoats/FB)

சிங்கப்பூரில், சானிடைசர் கிருமிநாசினி திரவம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Lifebuoy நிறுவனத்திடம் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 4000 அட்டைப்பெட்டிகள் சானிடைசர் அவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ஜலான் சுல்தான் பகுதியில் தீப்பிடித்து எரிந்த கார்!

இதனை உள்ளூர் தொண்டூழிய அமைப்பான ItsRainingRaincoats பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு சானிடைசர் திரவத்தின் தேவை தொடர்ந்து இருப்பதால் அதனை பெற்றத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

(Photo: ItsRainingRaincoats/FB)

நன்கொடை வழங்கிய அந்நிறுவனத்திற்கும் ஊழியர்கள் தங்களுடைய நன்றியை தெரிவித்தனர்.

மேலும், ஊழியர்களுக்கு உதவிசெய்ததற்காக Lifebuoy நிறுவனத்திற்கு ItsRainingRaincoats அமைப்பு நன்றியை கூறியுள்ளது.

தோ பாயோவில் ஒருவரை தாக்கி கொள்ளை அடித்த சந்தேக நபர் கைது!