சிங்கப்பூரைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அலென் ஹெங் என்ற அந்தச் சிறுவன் Star Cruise சொகுசுக் கப்பலில் தமது தாயுடன் சிங்கப்பூரில் இருந்து புக்கெட் (Phuket) செல்லத் திட்டமிட்டிருந்தார். பயணத்துக்கு இடையே சொகுசுக் கப்பல் நேற்று லங்காவியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, இரவு 7:30 மணியளவில் சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் சிறுவன் மாண்ட நிலையில் காணப்பட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
ஆரம்ப விசாரணையில் சிறுவன் நீந்தும்போது நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.
சிறுவன் நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது அவருடன் மற்ற பயணிகளும் குளத்தில் இருந்தனர் என்றும், இருப்பினும் சிறுவனை யாரும் பார்க்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
இறந்த சிறுவனின் உடல் லங்காவியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த சொகுசுக் கப்பல் நேற்றிரவு 10:30 மணிக்கு லங்காவியில் இருந்து புக்கெட் புறப்பட்டது. சொகுசுக் கப்பலில் சுமார் 3,000 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.