ஜோகூரில் உள்ள Jalan Pekeliling Industrial பார்க்கில் எரிந்த நிலையில் இருந்த காரின் உள்ளே ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று (அக் 23) அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில், உடல் கருகிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடைவேளை, ஓய்வு உள்ளிட்டவை கட்டாயம் – அக். 24 முதல் புதிய விதிகள் அறிமுகம்
இறந்தவர் 62 வயதான சிங்கப்பூர்-சீனர் என்றும், அவரது உடல் ஜோகூர் பாருவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை இரவு 11.13 மணியளவில் உதவி வேண்டி அவசர அழைப்பு வந்ததாக பாசிர் குடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தளபதி சர்ஹான் அக்மல் முகமட் கூறியுள்ளார்.
பின்னர், அவசர கால வாகனத்துடன் 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
அவர் ஓட்டிச் சென்ற கார் சறுக்கி பின்னர் மரத்தில் மோதி தீப்பிடித்திருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.