வெளிநாட்டில் ஏற்பட்ட விபத்து – மோட்டார் சைக்கிளில் சென்ற சிங்கப்பூரர் மரணம்

motorcycle-accident-thailand

தாய்லாந்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய 43 வயதான சிங்கப்பூரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து கடந்த ஜூன் 12ஆம் தேதி நடந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

லிட்டில் இந்தியாவில் புல்வெளியில் தவித்த இந்தியர்கள் – விசிட்டிங் வந்தவர்கள் அவதி

உடற்கல்வி ஆசிரியரான முகமது ரெசா அப்துல் ரஷித் என்ற அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிங்கப்பூரில் இருந்து மத்திய தாய்லாந்திற்கு சென்றதாக சொல்லப்பட்டுள்ளது.

அதாவது கடந்த ஜூன் 11 ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் புறப்பட்டார்.

அவர் 2021 Ducati Multistrada V4S மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

விபத்து எப்படி நடந்தது என்று குறிப்பிடப்படவில்லை. விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“வேலையில் பிரஷர் தாங்கல..” – தப்பித்து காட்டுக்குள் சென்று 6 நாள் வாழ்ந்த வெளிநாட்டு ஊழியர்: பசி எடுத்ததும் அவசர எண்ணை அழைத்த சோகம்