வெளிநாட்டு ஊழியர்களை கணக்கிடாமல் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டின் 4ம் காலாண்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு வெளிநாட்டு ஊழியர்களை கணக்கிடாமல் சுமார் 47,000 என அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்… சொந்த ஊரில் மர்ம நபர்கள் கைவரிசை – போலிசார் வலைவீச்சு
அதே போல, கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் வேலையை விட்டு நீக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,000க்கு அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 5வது காலாண்டாக சிங்கப்பூர் வேலைவாய்ப்பு வளர்ந்து வருவதாக மனிதவள அமைச்சகம் (MOM) குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரர்கள் அதிகமான வேலைகளில் சேர்க்கப்படுவது வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சம் நிலவி வருகிறது.
இருப்பினும், தொற்றுநோய் பாதிப்புக்கு பிறகு வெளிநாட்டு ஊழியர்களின் வருகையும் அதிகரித்து வருவதை நாம் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிந்துகொள்ள முடிகிறது.