“சிங்கப்பூருள்ள ஒரு ஆள் வாங்கிப்பாரு… எனக்கு கமிஷன் கெடைக்கும்” – சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய ஆடவர்: போலீசார் விசாரணை

(Chennai Airport)

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட இருந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சென்னை வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட அவரை மட்டும் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

உட்லண்ட்ஸில் பெண் ஒருவரை மானபங்கம் செய்த ஆடவர் கைது

ஆனால், அவரின் உடைமைகளில் எதுவும் கிடைக்கவில்லை, இதனை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் தன் உள்ளாடைக்குள் கட்டு கட்டாக அமெரிக்க டாலர் ரொக்கங்களை மறைத்து உள்ளே வைத்துதிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.

அதாவது அதன் பாதிப்பு ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் என்றும், அவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விசாரணையில், அந்த ரொக்கங்களை சென்னையை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் கொடுத்து வர சொன்னதாகவும் அதற்காக கமிசன், விமான டிக்கெட் அனைத்தையும் இலவசமாக தந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பெண்ணிடம் தன் பிறப்புறுப்பை வெளிக்காட்டிய 36 வயதுமிக்க ஊழியர் கைது