சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனி கவலை இல்லை.. DPM வோங் அளித்த உறுதி

Migrant workers vital to Singapore economy
Photo: Migrant Workers' Centre Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள ஊழியர்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று துணை பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

ஊழியர்களுடனான ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் இருக்கும் ஊழியர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக ஐடிஇ மற்றும் பாலிடெக்னிக் பட்டதாரிகளுக்கு அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தும் என்றும் DPM வோங் கூறினார்.

ஊழியர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதி செய்வது போன்றவை நோக்கி செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் உள்நாட்டு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதாலும், நிலையில்லாத வெளிச் சூழலுக்கு மத்தியில், சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் மீண்டும் பதிவு செய்தது.