சிங்கப்பூரில் கணவர் வேலைபார்த்து வரும் நிலையில், மனைவி சொந்த ஊரில் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி, பெரியக்காலாப்பட்டு பகுதியை சேர்ந்த மீனவரான பழனி சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரஞ்சிதா (32) என்ற மனைவி உள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து மனைவி ரஞ்சிதாவிற்கு கடந்த மார்ச் 4ம் தேதி போன் செய்து பழனி பேசியுள்ளார். அப்போது குழந்தைகள் காதணி விழா போட்டோ தொடர்பாக அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதன் காரணமாக விரக்தி அடைந்த ரஞ்சிதா துாக்கு போட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்க மக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அது பலனளிக்காமல் கடந்த 5 நாள் முன்னர் ரஞ்சிதா இறந்தார்.
இதுகுறித்து பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.