சிங்கப்பூரில் 1,400 சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் (PRs) ஒற்றைக் குடும்ப அலுவலகங்களில் பணிபுரிவதாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் கூறியுள்ளார்.
அவர்களுக்கு வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 6 அன்று எழுத்துப்பூர்வமாக அவர் பதிலளித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாத புள்ளி விவரங்களின் அடிப்படையில் அந்த தகவலை அவர் வழங்கினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 வேலைகள் உருவாக்கப்பட்டதாகவும், மேலும் அவை நல்ல சம்பளம் கொண்ட வேலைகள் என்றும் தர்மன் கூறினார்.
ஒற்றைக் குடும்ப அலுவலகங்களில் பணிபுரியும் சிங்கப்பூரர்களில் மூன்றில் இரண்டு பேர் மாதம் S$5,000க்கு மேல் சம்பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கூடுதலாக, 400க்கும் மேற்பட்டவர்கள் மாதத்திற்கு S$2,000 முதல் S$5,000 வரை சம்பாதிப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் 50க்கும் குறைவானவர்கள் மாதத்திற்கு S$2,000க்கும் குறைவாகவே சம்பளம் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குடும்ப அலுவலகங்களை நிறுவியதன் மூலம் சிங்கப்பூரர்கள் மற்றும் PRகளுக்காக உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் பெறும் சம்பள வரம்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது.
அதற்கு மேற்கண்ட புள்ளிவிவரங்களை அமைச்சர் பதிலாக அளித்தார்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
பேருந்து, லாரி உட்பட 4 வாகனங்கள் மோதி கடும் விபத்து: ஒருவர் மரணம் – லாரி ஓட்டுநர் கைது