ரகசிய ஸ்பை கேமரா மூலம் தனது முன்னாள் காதலியின் நிர்வாண வீடியோக்களை எடுத்ததற்காக ஆடவர் ஒருவருக்கு எட்டு வாரங்கள் சிறை தண்டனை இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) விதிக்கப்பட்டது.
இந்த குற்றத்தை 48 வயதான அவர் ஒப்புக்கொண்டார். இதேபோன்ற மற்றொரு இரண்டு குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டன.
“உயிரிழந்த ஊழியர்களுக்கு 2 வருட அனுபவம் உள்ளது…” MOM கூற வரும் செய்தி என்ன?
அவர்கள் இருவரும் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காதல் உறவில் இருந்து பிரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக தங்கி இருந்த அறையை விட்டு ஆடவர் வெளியேறினார். ஆனால் அறையின் லாக் கடவுச்சொல் அவருக்குத் தெரிந்த காரணத்தால் ஸ்பை கேமரா வைக்கும் வேலை அவருக்கு இலகுவானது.
அதாவது 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அந்த அறைக்குள் கள்ளத்தனமாக நுழைந்த அவர் பின்ஹோல் ரகசிய கேமராவை அங்கு நிறுவினார்.
அங்குள்ள பொருட்களுக்கு இடையில் கேமராவை மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது.
பின்னர் நவம்பர் மாதம் அந்த பொருட்களை நகர்த்தும்போது அந்த ரகசிய கேமராவை கண்டுபிடித்த அந்த பெண், அதில் பதிவான வீடியோக்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பிடிபட்ட அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியா பகுதியில் இப்படியெல்லாம் நடக்குதா?… அனுபவத்தை பகிர்ந்து எச்சரிக்கும் நபர்