ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவிட்- 19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கீழ்வரும் மாற்றங்கள் ராஜகோபுரம் மற்றும் விமான பாலஸ்தாபனம் நாளான ஜனவரி 21- ஆம் தேதி முதல் ஜனவரி 23- ஆம் தேதி வரை பொருந்தும்.

‘கோயம்புத்தூர், சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- பிப்ரவரி மாதத்திற்கான பயண அட்டவணை!

முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். சிறப்பு வழிபாட்டை கோயிலின் பகுதியில் நின்றவாறு பார்வையிட இயலாது. பக்தர்கள் அமைக்கப்பட்ட பாதை வழியே நடந்தவாறு தரிசனம் செய்யுமாறு தாழ்மையுடன் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு செய்வதால் மற்ற பக்தர்களாலும் கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்ய முடியும்.

வரும் ஜனவரி 21- ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு முதல் ஜனவரி 23- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை வரை, அர்ச்சனைகள் மற்றும் முன்பதிவு செய்ய பூஜைகள் நடைபெறாது.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பிப்ரவரி மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

பின்வரும் நிகழ்வுகளின் நேரலையை https://heb.org.sg/ எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையதளப் பக்கத்தில் பார்வையிடலாம்.

21 ஜனவரி 2022 | மாலை 06.00 மணி
22 ஜனவரி 2022 | காலை 09.00 மணி மற்றும் மாலை 07.00 மணி
23 ஜனவரி 2022 | காலை 07.00 மணி

கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.