ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில், ஸ்ரீ சதசண்டி மஹாயாகம்!

 

சிங்கப்பூரில் உள்ள 31 மார்சிலிங் ரிஸ் சாலையில் (31 Marsiling Rise) அமைந்துள்ளது ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயம் (Sri Siva Krishna Temple). இந்த ஆலயத்தில் வரும் ஆகஸ்ட் 03- ஆம் தேதி வியாழன்கிழமை முதல் ஆகஸ்ட் 13- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஸ்ரீ சதசண்டி மஹாயாகம் (Sri Satha Chandi Mahayaagam) நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

புக்கிட் பஞ்சாங்கில் கார் மோதி ஒருவர் மரணம்

13 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக, நமது ஆலயத் திருப்பணி வேலைகள் தடையின்றி மஹா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெறவும், இந்த சதசண்டி மஹா யாகம் ஸ்ரீ அன்னைக்கு நாம் அனைவரும் செய்ய மேற்கொள்கிறோம்.

இந்த 10 நாட்களும், யாகசாலை பூஜையில், வேதபாராயணம், ஸ்ரீதேவி மஹாத்மிய பாராயணம், திருமுறை பாராயணம், சிறப்பு அபிஷேகம், பக்தர்கள் பங்குபெறும் கூட்டு சங்கல்பம் நடைபெறும்.

ஆகஸ்ட் 13- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அம்பாள் ஊஞ்சலும், மாலை 06.00 மணிக்கு மங்கையர் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜையும், இரவு 08.30 மணிக்கு மஹா தீபாராதனையும், அதைத் தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊழியர் வாகனம் மோதி மரணம் – வேலையிடத்தில் நடந்த சோகம்

ஆகஸ்ட் 04- ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்ட் 13- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை காலை மற்றும் மாலை இருவேளையிலும், மஹா பூர்ணாஹூதியில் பங்கு பெற 51 வெள்ளியை செலுத்தி, நக்ஷத்திரம் மற்றும் பெயர்களை பதிவு செய்து கூட்டு சங்கல்பத்தில் பங்கு பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.