ஸ்ரீ சிவன் கோயிலில், மஹா ருத்ரம் பூஜை!

Photo: Sri Sivan Temple

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் (Sri Sivan Temple) ஆகஸ்ட் 18- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20- ஆம் தேதி வரை மஹா ருத்ரம் பூஜை (Maha Rudram Prayers) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் சந்தேகத்திற்கிடமான 348 நபர்களிடம் போலீசார் விசாரணை

இது தொடர்பாக இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீ சிவன் கோயிலில், ஆகஸ்ட் 18- ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை ருத்ர பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெறும்.

அதேபோல், ஆகஸ்ட் 19- ஆம் தேதி காலை 08.30 மணி முதல் காலை 11.30 மணி வரை யாகசாலை பூஜையும், ருத்ர பூஜையும், ருத்ர ஹோமமும், பூர்ணாஹுதியும், தீபாராதனையும், மாலை 06.30 மணி முதல் மாலை 08.30 மணி வரை யாகசாலை பூஜையும், ருத்ர பூஜையும், ருத்ர ஹோமமும், பூர்ணாஹுதியும் மற்றும் தீபாராதனையும் நடைபெறும்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மதுரை பயணி – அப்டியே அலேக்கா தூக்கிய போலீஸ்

ஆகஸ்ட் 20- ஆம் தேதி காலை 07.00 மணி முதல் காலை 11:30 மணி வரை யாகசாலை பூஜையும், கோ பூஜையும், ருத்ர பூஜையும், ருத்ர ஹோமமும், வசோர்தாரா, பூர்ணாஹுதியும், ருத்ர கலச அபிஷேகமும், திரிசதி அர்ச்சனையும் மற்றும் மஹா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறும்; மாலை 06.00 மணி முதல் மாலை 08.00 மணி வரை ஶ்ரீ விசாலாட்சி ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கல்யாணமும் நடைபெறும்
என்று இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.