‘ஸ்ரீ சிவன் கோயிலில், மஹாளய அமாவாசை’- தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்களுக்கான அறிவிப்பு!

Photo: Sri Sivan Temple

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மஹாளய அமாவாசையையொட்டி (Mahalaya Amavasai) சிறப்பு வழிபாடு நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

உள்ளாடையில் மறைத்து வைத்து சிங்கப்பூரில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த பயணி…..சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் (Sri Sivan Temple), மஹாளய அமாவாசை வரும் அக்டோபர் 14- ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கோயிலின் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும். இணையம் வழி முன்பதிவு செய்யாமல், அந்நாளில் நேரடியாக கோயிலுக்கு வந்து தர்ப்பணம் சீட்டை வாங்க முடியாது.

செப்டம்பர் 18- ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் https://bit.ly/mahalayaamavasai2023 என்ற கோயில் இணையதளப் பக்கத்திற்கு சென்று தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்கள், அதற்கான கட்டணத்தைச் செலுத்தி முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம். பின்னர், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிபாட்டு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் கோயிலுக்கு வந்தடைந்தால் போதுமானது.

நிலைதடுமாறி கால்வாயில் விழுந்த ஆடவர் – மிகவும் பலவீனமாக இருந்ததாக தகவல்

கோயிலில் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை வழியே நிற்காமல் தொடர்ந்து நடந்தவாறு வழிபாடு முடிந்ததும், கோயில் வளாகத்திலிருந்து புறப்படும்படி பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.