சிங்கப்பூரில் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சாமி தரிசனம்!

Photo: Minister Muraleetharan Official Twitter Page

சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், பிப்ரவரி 20- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள சிராங்கூன் சாலையில் (397 Serangoon Rd) அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு (Sri Srinivasa Perumal Temple) நேரில் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சந்திப்பு!

பின்னர், இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board- ‘HEB’) உறுப்பினர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிகழ்வின் போது, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போலி ATM கார்டுகளை தயாரித்து, அதனை பணம் எடுக்க பயன்படுத்திய நபர் கைது

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட சிங்கப்பூர் வெளியுறவுத்துறை இணையமைச்சர், அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், பரதநாட்டியம் நிகழ்ச்சிகளைக் கண்டுக்களித்தார்.