‘ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் பால்குட அபிஷேகம்’- பக்தர்களுக்கு அழைப்பு!

'ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் பால்குட அபிஷேகம்'- பக்தர்களுக்கு அழைப்பு!
Photo: Hindu Endowments Board

 

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple) அம்மனுக்கு வரும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி பால்குட அபிஷேகம் (Paalkuda Abishegam) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

கடனை அடைக்க வேண்டி தன் சிறுநீரகத்தை S$10,600க்கு விற்ற வெளிநாட்டு நபர் – வாங்கியவர் சிங்கப்பூரர்

அதன்படி, ஆகஸ்ட் 6- ஆம் தேதி காலை 07.30 மணிக்கு சங்கல்பம், விக்னேஸ்வர பூஜையும், ஹோமமும், காலை 08.30 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனையும், காலை 09.00 மணிக்கு சிறப்பு பால்குடம் அபிஷேகமும், காலை 11.00 மணிக்கு மஹா தீபாராதனையும், காலை 11.45 மணிக்கு அன்னதானமும், இரவு 07.30 மணிக்கு பூச்சொரிதல், உபய பூஜையும், சுவாமி புறப்பாடும், இரவு 08.45 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

கட்டுமான தடுப்பு மீது மோதிய கார்.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம். ஆகஸ்ட் 6- ஆம் தேதி காலை 09.00 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.