சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இக்கோயிலானது 2001 டோவா பாயோஹ் லோரோங் 8- ல் (2001 Toa Payoh Lorong 8) அமைந்துள்ளது. மேலும், இந்த கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு (Hindu Endowments Board) கீழ் வருகிறது.
தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு பிறப்புறுப்பில் கத்தி கொண்டு தாக்கிய ஆடவருக்கு 5 ஆண்டு சிறை!
வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விஷேச நாட்களில் இக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அந்த வகையில், வரும் மே 15- ஆம் தேதி அன்று ஸ்ரீ துர்கா சுமங்கலி பூஜை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிஷேகப் பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம். வரும் மே 15- ஆம் தேதி அன்று காலை 09.15 மணி முதல், பால்குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.
மே 15- ஆம் தேதி அன்று காலை 10.30 மணி முதல், சுமங்கலி பூஜையில் கலந்துக் கொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வரும் மே 7- ஆம் தேதி முதல் மே 12- ஆம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.