மே 15- ஆம் தேதி அன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ‘ஸ்ரீ துர்கா சுமங்கலி பூஜை’!

Photo: Sri Vairavimada Kaliamman Temple Official Website

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இக்கோயிலானது 2001 டோவா பாயோஹ் லோரோங் 8- ல் (2001 Toa Payoh Lorong 8) அமைந்துள்ளது. மேலும், இந்த கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு (Hindu Endowments Board) கீழ் வருகிறது.

தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு பிறப்புறுப்பில் கத்தி கொண்டு தாக்கிய ஆடவருக்கு 5 ஆண்டு சிறை!

வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விஷேச நாட்களில் இக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அந்த வகையில், வரும் மே 15- ஆம் தேதி அன்று ஸ்ரீ துர்கா சுமங்கலி பூஜை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிஷேகப் பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம். வரும் மே 15- ஆம் தேதி அன்று காலை 09.15 மணி முதல், பால்குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் ஊழியர்…தமிழ்நாட்டில் சொந்த வீட்டை கட்டி வரும் வேளையில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு! – உடைந்து போன ஊழியர்

மே 15- ஆம் தேதி அன்று காலை 10.30 மணி முதல், சுமங்கலி பூஜையில் கலந்துக் கொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வரும் மே 7- ஆம் தேதி முதல் மே 12- ஆம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.

மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.