ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக 4 பேர் பிடிபட்டுள்ளனர்.
இதில் 16 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் சம்மந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை 6 அன்று ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கடைகளில் இருந்து ஆடம்பரப் பொருட்கள் திருடப்பட்டதாக அதிகாரிகளுக்கு இரண்டு புகார்கள் வந்தன.
ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரி, 5 பைக்குகள் மோதி விபத்து: 5 பேர் மருத்துவமனையில்…
இதனை அடுத்து, டாங்லின் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் நான்கு நபர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தொடர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 பேரும் நேற்று முன்தினம் ஜூலை 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் 20க்கும் மேற்பட்ட திருட்டு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது பிராண்டட் டாமி ஹில்ஃபிகர் மற்றும் ஃபெண்டி ஆடைகள், டிராவல் அடாப்டர், மூன்று பாட்டில்கள் மற்றும் இரண்டு தொப்பிகள் ஆகியவை அதில் அடங்கும்.
திருடப்பட்ட அனைத்து பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் S$2,420 இருக்கும் என SPF கூறியுள்ளது.
அந்த நான்கு நபர்கள் மீதும் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்