மகளிடம் தவறாக நடந்துகொண்ட கொடூர தந்தை: 42 மாத சிறை, ஆறு பிரம்படி விதிப்பு

foreign workers wife target teacher arrested
Pixabay

தனது முன்னாள் மனைவியின் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக 47 வயதான சிங்கப்பூர் ஆடவருக்கு 42 மாத சிறைத்தண்டனையும், ஆறு பிரம்படியும் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜன. 18) விதிக்கப்பட்டது.

தற்போது 14 வயதாகும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் விதமாக உத்தரவு இருப்பதால் பாதிக்கப்பட்டவரின் பெயரைக் குறிப்பிட முடியாது.

பளிச்சென்று அடித்த வெயில்…நிறுத்தப்பட்டிருந்த லாரி பின்புறத்தில் மோதிய ஓட்டுனருக்கு கடும் காயம் – பதைபதைக்கும் வீடியோ

அந்த ஆடவர் இரண்டு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார் என கூறப்படுகிறது.

மேலும், அவர் மீது மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன, அப்போது ஒன்பது வயதாக இருந்த அவரது முன்னாள் மனைவியின் மகனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றமும் இதில் அடங்கும்.

அவர் பாதிக்கப்பட்டவரின் தாயை 2016இல் திருமணம் செய்து கொண்டார், பாதிக்கப்பட்ட அந்த பெண் தாயின் நான்கு குழந்தைகளில் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண் டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்திருந்ததை கண்ட ஆடவர், பெண் அருகே நெருங்கினார்.

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் உள்ளாடைகளுக்கு மேல் கையை வைத்து தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இரு பெண்களிடம் தனது பிறப்புறுப்பை காட்டிய ஆடவர்… CCTV மூலம் அதிரடியாக கைது செய்த போலீஸ்