சிங்கப்பூரில் ரகசிய கேமராவுடன் பெண்களை குறிவைக்கும் மர்ம நபர்… பார்க்கவே பயமாக இருப்பதாக நெட்டிசன்ஸ் டாக்

screengrab/TikTok/Coffee_and_sesame

சிங்கப்பூரில் ரகசிய கேமராவுடன் வளம்வரும் மர்ம நபர் ஒருவர் சாலைகளில் பெண்கள் பலரை அணுகுவதாக புகார் எழுந்துள்ளது.

போத்தாங் பாசிர் MRT ரயில் நிலையத்திற்கு வெளியே நடமாடி திரிந்த அவர் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அந்தப் பகுதியில் உள்ளவர்களை TikTok பயனர் ஒருவர் எச்சரித்தார்.

மறுதொற்று காரணமாக சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதியில் அடுத்த அலை ஏற்படக்கூடும்!

“அந்த மர்ம நபர் உங்களிடம் வந்து கணக்கெடுப்பு எடுப்பதாக சொல்வார். தயவுசெய்து அதனை நம்ப வேண்டாம்” என்று அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.

அவர் லென்ஸ் இல்லாத தடிமனான கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார் என்றும். நீங்கள் உற்று நோக்கினால், பக்கத்தில் ஒரு கேமரா இருப்பதை காணலாம் என்பதையும் TikTok பயனர் குறிப்பிட்டார்.

இதே நபர் இதற்கு முன்பு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) மற்றும் சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் அருகே காணப்பட்டார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வீடியோ 150,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், அந்த நபரின் தோற்றம் பயத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாகவும் நெட்டிசன்கள் பலர் கருத்து கூறுகின்றனர்.

பேருந்தை ஓட்டும்போது தூங்கிய ஓட்டுநர்… சிமென்ட் கற்களில் மோதி விபத்தில் சிக்கிய பேருந்து – ஓட்டுனருக்கு சிறை