சிங்கப்பூரில் போதை பொருட்களை கடத்திய சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) தெரிவித்துள்ளது.
இந்த மாதம் நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் அவர்கள் ஈடுப்பட்டதாகவும், பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் CNB குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இரண்டு நாட்களாக 13 வயது சிறுமியை காணவில்லை
அவர்கள் மூன்று பேர் 14 வயதுடையவர்கள் மற்றும் இருவருக்கு வயது 16 என்றும், அவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் என்றும் CNB செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
பிடிபட்ட சுமார் 226 கிராம் போதை பொருளில் மதிப்பு சுமார் S$7,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் போதைபொருள் கலந்ததாக நம்பப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டன.
விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
சிங்கப்பூரில் அதிரடி சோதனை… சந்தேகத்தில் பிடிபட்ட 310 பேர் – போலீசார் விசாரணை