தமிழ்நாடு போலீசாரால் தேடப்பட்டு வந்த ஊழியர் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது போலீசார் வளைத்து பிடித்தனர்.
வரதட்சணை கொடுமை வழக்கில் தொடர்புள்ள புதுக்கோட்டையை சேர்ந்த ஊழியரை திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்தனர்.
சிங்கப்பூரை இரண்டாவது-அதிக அபாய நிலையில் வகைப்படுத்திய நாடு
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இண்டிகோ விமானம் வந்தது.
அதில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்தவர் துரைசாமி, இவரின் மகன் கணேசன் (41) என்ற ஊழியர் பயணம் செய்து வந்துள்ளார்.
வரதட்சணை வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். பின்னர் சிங்கப்பூா் தப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் திருச்சி வந்த தகவல் அறிந்த அதிகாரிகள் கைது செய்தனர்.