வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி! – தமிழ் தலைவாஸ் அணி வெற்றி!

சிங்கப்பூரின் பாலஸ்டியர் சாலையில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் இந்தியர் சங்கம்,சிலோன் விளையாட்டு மன்றம் ஆகியவற்றின் விளையாட்டுத் திடல்களில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் போட்டியில் ஆறு அணிகள் மோதின. பாலஸ்டியர் சூப்பர் கிங்க்ஸ்,கன்ஸ்ட்ரக்ஷன் ஆல்ரவுண்டர்ஸ்,சி எஸ் சி ட்ரூபர்ஸ்,டிபி எஸ் ஸ்பார்க்ஸ்,தமிழ் தலைவாஸ்,ட்ரான்ஸ்வேர்ல்ட் லயன்ஸ் ஆகிய அணிகள் களமிறங்கின.

விறுவிறுப்பான ஆட்டத்தில் இறுதியாக தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக $2,500 வழங்கப்பட்டது.இரண்டாவது பரிசுத் தொகையாக $1,500 பாலஸ்டியர் சூப்பர் கிங்க்ஸ் அணிக்குக் கிடைத்தது.

இரு அணிகளும் வெற்றிக் கோப்பைகளைப் பெற்றுக்கொண்டன.விளையாட்டு வீரர்கள்,பார்வையாளர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன.