சிங்கப்பூரில் வேலைசெய்த ஊழியர் தன் சொந்த தந்தையையே அடித்து கொன்ற கொடூர சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.
30 வயதுக்கு மேல் இருக்கும் குமரேசன் என்ற ஊழியர் கடந்த 5 வருடங்களாக சிங்கப்பூரில் வேலை செய்தவர், இவரின் சொந்த ஊரு திருவாரூர் மாவட்டம்-மன்னார்குடி.
இவருக்கு திருமணம் முடிந்து இரு வருடங்கள் கடந்துள்ளது. தற்போது சொந்த ஊரில் இருக்கும் குமரேசனுக்கும் 58 வயதான தந்தை ரவிக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.
சிங்கப்பூரில் வேலை தேடும் சிலருக்கு நற்செய்தி: புதிய Work Pass அறிமுகம்
அதாவது அவர்களுக்கு மாடி மற்றும் குடிசை வீடுகள் உள்ளன, அதில் இருப்பதில் பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
ஒரு முறை ரவி கூறியுள்ளார்; “நானும் என் மனைவியும் மாடிவீட்டில் ஒரு அறையில் தங்கி கொள்கிறோம்”, என்றார்.
இதில் ரவிக்கும், மருமகளுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் கோபமடைந்த மகன் குமரேசன் மண்வெட்டி கட்டையை எடுத்து சரமாரியாக ரவியை தாக்கியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த ரவி அங்கேயே இறந்தார். இதனை அடுத்து குமரேசன் மற்றும் மனைவி இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து போலீசிடம் புகார் செய்யப்பட்டது, அதன் பேரில் மன்னார்குடி போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்… கவனக்குறைவாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது