சிங்கப்பூரில் இருந்து திருப்பத்தூர் சென்ற வினோத் குமார் உடல் – சாதிக்க வந்த இளைஞன் சவப்பெட்டியில்… கதறிய குடும்பம்

tamil-worker-death-singapore-collapsed

சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக ஊழியர் வினோத்குமாரின் உடல் தமிழ்நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அவரின் உடல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் மூலமாக நேற்று ஜூன் 17 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஈடுகட்டமுடியாத தமிழக ஊழியரின் இழப்பு – துயரில் மூழ்கிய குடும்பத்துக்கு உதவிக்கரம்

அதன் பின்னர் திருச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

தாய்மாமா மற்றும் மற்றொரு உறவும் அவரின் உடலை உடனிருந்து கொண்டு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் அவர் பணிபுரிந்த நிறுவனம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பல கனவுகளுடன் வாழ்வில் பெரிதாக சாதிக்கப்போவதாக சொந்த ஊரில் இருந்து சிங்கப்பூர் கிளம்பி வந்த இளைஞர் சவப்பெட்டியில் சடலமாக சென்றது காண்போரை கண்கலங்க வைத்தது.

அவரை இழந்து வாழும் அவரின் குடும்பத்திற்கு எந்த ஆறுதலும் நம்மால் சொல்ல முடியா விட்டாலும் அவருக்காக பிராத்தனை செய்வோம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க:

தஞ்சோங் பகார் கட்டிட விபத்து: காணாமல் போன 20 வயதான இந்திய ஊழியர்… 50 டன் கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கி பரிதாப மரணம்

யார் இந்த வினோத் குமார்?, சிங்கப்பூர் வந்தது எப்படி?- விரிவாகப் பார்ப்போம்!