“மதுரை, திருச்சி, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு”- அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Photo: Air India Express Official Twitter Page

 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவை வழங்கி வருகிறது. குறிப்பாக, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்திற்கு மூன்று விமான சேவையையும், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்திற்கு ஏழு விமான சேவையையும், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்திற்கு நான்கு விமான சேவையையும் வழங்கி வருகிறது.

புக்கிட் பஞ்சாங்கில் கார் மோதி ஒருவர் மரணம்

இந்த வழித்தடத்தில் செல்லும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக 7,782 ரூபாயும், மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக 8,048 ரூபாயும், திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக 8,195 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில், ஸ்ரீ சதசண்டி மஹாயாகம்!

இந்த வழித்தட விமானச் சேவைக்கான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.com/home என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.