தமிழகத்தின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்?- விரிவாக பார்ப்போம்!

Photo: Air India Express Official Twitter Page

இந்தியாவைச் சேர்ந்த முக்கிய விமான நிறுவனங்களின் ஒன்றான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சவூதி பல்பொருள் அங்காடியில் மாரடைப்பால் உயிரிழந்த தமிழர்!

சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே வாரத்தில் திங்கள்கிழமை மற்றும் வியாழன்கிழமைகளில் மட்டும் இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், நவம்பர் மாதம் முதல் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் விமான சேவையை வழங்கவுள்ளது.

அதேபோல், மதுரை மற்றும் சிங்கப்பூர் இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமைகளில் விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனம், நவம்பர் முதல் கூடுதலாக வியாழன்கிழமைகளில் விமான சேவையை வழங்கவுள்ளது.

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

தமிழக முதலமைச்சருடன் மலேசிய நாட்டு அமைச்சர் சந்திப்பு!

இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆயுதபூஜை, தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்டப் பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான டிக்கெட் முன்பதிவு அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.