தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா… மீண்டும் கட்டுப்பாடுகளா? வெளிநாடு வாழ் தமிழர்கள் பெரும் கவலை

Singapore to trichy flight passengers covid update

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்க தொடங்கியுள்ளதால் வெளிநாட்டை நம்பியுள்ள தமிழக ஊழியர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தமிழக ஊழியர்கள் தற்போது தான் எந்த சிரமமும் இன்றி தாங்கள் வேலைபார்க்கும் நாடுகளுக்கு இலகுவாக சென்று வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு திரும்பிய தந்தை… மகள் மர்மமான முறையில் மரணம் – கணவர் போலீசில் புகார்

இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது, இது பல தரப்பு மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொழில் செய்யும் மக்கள் தற்போது தான் மெல்ல மெல்ல கஷ்ட காலங்களை கடந்து வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் தொற்று அனைவரிடத்திலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களோடு அல்லாமல் அமெரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.