#Exclusive: சிங்கப்பூரில் தமிழக ஊழியரை 3 மாதங்களாக காணவில்லை: “எப்டியாவது கண்டுபிடிச்சி தாங்க” கண்ணீருடன் பெற்றோர்!

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் வரதராஜன் என்ற 28 வயது இளைஞர். இவர் சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் கட்டுமான தொழிலாளியாக 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவர், 9 SUNGEI KADUT AVENUE என்ற வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், அவர் கடந்த 2021 டிசம்பர் 5ம் தேதி மதியம் 02.00 மணிக்கு தங்கும் விடுதியில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு, அடுத்த நாள் (டிசம்பர் 06) இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் ராஜமாணிக்கம் விடுதிக்கு திரும்பவில்லை.

இதையடுத்து, தொழிலாளர் லிம் பூன் கெங் (Lim Boon Keng), உட்லேண்ட்ஸ் டிவிஷன் தலைமை காவல் நிலையத்தில் (Woodlands Division HQ), ராஜமாணிக்கம் வரதராஜன் என்பவர் காணவில்லை என்று புகார் அளித்தார். ராஜமாணிக்கம் எங்கே இருக்கிறார் என்பது இதுவரையிலும் தெரியவில்லை.

ராஜமாணிக்கம் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு மூன்று மாத காலம் ஆகியும் இன்று (மார்ச் 07) வரை அவர் எங்கு உள்ளார் என்ற எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றும், தன் மகனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் தமிழகத்தில் உள்ள அவரது பெற்றோர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாகவும் ராஜமாணிக்கத்தின் உறவினர் ஒருவர் நமது (தமிழ் மைக்செட் சிங்கப்பூர்) முகநூல் பக்கத்தில் தொடர்புகொண்டு தெரிவித்தார்.

காணாமல் போன ராஜமாணிக்கத்தின் புகைப்படம்.

சிங்கப்பூரில் ராஜமாணிக்கம் வரதராஜனை யாரேனும் கண்டால் உடனடியாக +917358845118 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அளிக்குமாறு, அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். ராஜமாணிக்கம் காணவில்லை குறித்து முன்னர் நாம் வெளியிட்ட பதிவு.