சிங்கப்பூர் சென்றடைந்த தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

சிங்கப்பூர் சென்றடைந்த தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
Photo: TRB RAJA Official Twitter Page

 

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 23) காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்கிறார். முதலமைச்சருடன் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் சிங்கப்பூர் செல்கின்றனர்.

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- பயணத் திட்டம் குறித்த விரிவான தகவல்!

அங்கு சிங்கப்பூர்- இந்திய தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்தாண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கவுள்ளார்.

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மற்றும் சிங்கப்பூர் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் முதலமைச்சரை வரவேற்பதற்காகவும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று (மே 22) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு…. பதக்கப் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம்?

இந்த சுற்றுப்பயணத்தின் போது, தொழில் முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.