சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 07) பிற்பகல் 823 A தெம்பனிஸ் (Tampines) ஸ்ட்ரீட் 81ல் உள்ள காபி ஷாப்பில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து சில மணி நேரத்திற்குள் தண்ணீர் ஜெட்கள் மூலம் தீயை அணைத்தனர்.
சிங்கப்பூரில் தற்போது 128 தொற்று குழுமங்கள் கண்காணிப்பில்…
தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 81ல் உள்ள காபி ஷாப்பில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தால், அங்கு செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன, பாதுகாப்பை கருதி அங்கிருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
நேற்று பிற்பகல் சுமார் 2:20 மணியளவில், சில வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் CNA-விடம் தெரிவித்தனர்.
தெம்பனிஸ் காபி ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை கூறியுள்ளது.