இனி வருமானம் உயரலாம்! – சிங்கப்பூரில் டாக்ஸி, வாடகை வாகன ஓட்டுனர்களின் வருமானம் உயர இதுதான் காரணம்..

Photo: TaxiSingapore.Com

சிங்கப்பூருக்கு அதிகளவிலான பயணிகள் வருவதால், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் இவ்வாண்டு வருமானம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிப்பின்படி, அதிகப் பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதால் ஓட்டுநர்களின் வருமானம் அதிகரிக்கும் அதேசமயத்தில் சுகாதாரம் குறித்த கவலைகள் இருப்பதாக தேசிய டாக்ஸி சங்கம், தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம் ஆகியவற்றின் ஆலோசகர் யோ வான் லிங் (Yeo Wan Ling) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று சாங்கி விமான நிலையத்தில் டாக்ஸி, வாகன ஓட்டுனர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் விரிவாகப் பேசியுள்ளார். அவரது கூற்றுப்படி, ஓட்டுநர்களின் தேவையை அறிந்து அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தருவது முக்கியம். மேலும் இன்றைய நிகழ்ச்சியில் ஓட்டுனர்களுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கப்ப்டுள்ளன.