யுஷூன் சென்ட்ரலில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று, திடீரென்று ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்லும் காணொளி கேமராவில் படம்பிடிக்கப்பட்டது.
ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இரண்டு முறை இந்த முந்திச் செல்லும் சம்பவம் நடந்தது டேஷ்கேமில் பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம், நேற்று பிப். 5ஆம் தேதி மாலை 4:22 மணியளவில் நடந்ததாக SG Road Vigilante ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.
டாக்ஸி முந்தி சென்ற போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பிரேக் போட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதற்கு கருத்து தெரிவித்த நெட்டிசன்கள், டாக்ஸி ஓட்டுனரின் இந்த பொறுமையற்ற மற்றும் கவனக்குறைவாக செயல் குறித்து கடுமையாக சாடியுள்ளனர்.
டாக்ஸி ஓட்டுநரை சாலையிலிருந்து இறக்கிவிட்டு, ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர்.