காசநோய் பரவல் எதிரொலி: இவர்கள் TB பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்!

Illustrate Testing Photo

பிளாக் 2 ஜாலான் புக்கிட் மேராவில் குடியிருப்பவர்கள், கடைக்காரர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் காசநோய் (TB) பரிசோதனையை எடுத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சகம் (MOH) வலியுறுத்தியுள்ளது.

இந்த சோதனை சனிக்கிழமை (மே 21) இலவசமாக நடத்தப்படும் என்றும், அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அடுத்த செவ்வாய் வரை (மே 27 முதல் 31 வரை) நடைபெறும் என்றும் MOH தெரிவித்துள்ளது.

பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர் – 24 மணிநேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்!

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் ஏழு பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.

அந்த 7 தனிநபர்களும் பிளாக்கின் ஏழு வெவ்வேறு வீடுகளில் வசிக்கின்றனர் என்பதை MOH குறிப்பிட்டுள்ளது.

குடியிருப்பாளர்களின் வசதிக்காக, நடமாடும் சோதனை குழுக்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று சோதனைகளை மேற்கொள்ளும்.

தோ பாயாவில் இறந்து கிடந்த ஆடவர் – யார் என்று போலீஸ் விசாரணை