யுஷுனில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில், லிப்டுக்காக காத்திருந்த 15 வயது சிறுமியிடம் 17 வயதுமிக்க சிறுவன் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பிளாக் 263 யுஷுன் ஸ்ட்ரீட் 22ல் நேற்று முன்தினம் மார்ச் 19 அன்று காலை 11 மணியளவில் நடந்தது என ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரிகளின் புகைப்படத்தையும் அது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் 42 வயதான தந்தை இது பற்றி கூறுகையில்; வீட்டிற்கு செல்லும் வழியில் தனது மகள் அந்த சிறுவனை கண்டதாக விளக்கினார்.
மேலும், லிப்டுக்காகக் காத்திருந்தபோது சிறுவன் அந்த சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது.
சிறுவன் பின்னால் இருந்து பெண்ணின் காலரை பிடித்ததாக பாதிக்கப்பட்டவரின் தந்தை ஷின் மின்னிடம் கூறினார்.
பின்னர் அதிர்ச்சியடைந்த சிறுமி, உடனடியாக திரும்பிப் பார்த்து உரத்த குரலில் கத்தியுள்ளார். அதனை அடுத்து, சிறுவன் விட்டுவிட்டு ஓடியதாக கூறினார் அவர்.
லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத செயல்: ரகசிய கோட் வேர்ட்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!