தேக்கா சென்டரில் சண்டை… இருவரை கைது செய்தது போலீஸ் – வீடியோ வைரல்

Tekka Centre fight

தேக்கா சென்டரில் சண்டையில் ஈடுபட்ட இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (மே 3) இரவு நடந்ததாக கூறப்படும் அந்த சண்டையில் 31 மற்றும் 34 வயதுடைய இருவர் கைதாகினர்.

சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் இருந்த இருவர்… சுமார் 8 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தட்டி தூக்கிய போலீஸ்

அந்த இடத்தில் இருந்த ஸ்டாம்ப் வாசகர் வெய் சியென் என்பவர் அங்கு எடுத்த வீடியோக்களை ஸ்டாம்புடன் பகிர்ந்துள்ளார்.

அந்த காணொளிகளில், போலீஸ் அதிகாரிகள் பலர் உணவு நிலையத்தில் இருப்பதை காணலாம்.

அதில் மஞ்சள் டி-ஷர்ட் அணிந்த ஒருவருடன் அதிகாரிகள் பேசுவதைக் காணலாம், பின்னர் அவருக்கு கைவிலங்கு போட்டு அழைத்து செல்வத்தையும் காண முடிகிறது.

“காவல்துறை அதிகாரிகள் ஆடவர்களை கைது செய்ததை நான் கண்டேன், ஆனால் நான் அங்கு நடந்த சண்டையை பார்க்கவில்லை” என்று அவர் கூறினார்.

“சம்பவ இடத்தில் இருந்து இந்த வீடியோக்களை எடுக்கும் முன்னர் அவர்கள் சண்டையில் ஈடுபட்டதாக சில வியாபாரிகளிடம் இருந்து கேட்டு அறிந்தேன்.”

இதில் 665 Buffalo ரோட்டில் நடந்த சண்டை குறித்து புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

“31 மற்றும் 34 வயதுடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

கடுமையான நெருக்கடி, செலவினங்கள் அதிகரிப்பு – “சம்பள உயர்வு வேண்டும்” கோரிக்கை வைக்கும் ஊழியர்கள்!