பிளாக் 39 டெலோக் பிளாங்கா ரைஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜனவரி 29) ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதில் இறந்தவர், 48 வயதான வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் கோய்மதுன் அச்மத் அலி (Koimatun Achmad Ali) என்பதை மதர்ஷிப் புரிந்துகொள்கிறார்.
சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தமிழக ஊழியர் திடீர் இறப்பு
அதே பிளாக்கில் வசிக்கும் இறந்தவரின் நண்பரான கெவின் ஹோவிடமிருந்து மதர்ஷிப் இந்த செய்தியைப் பெற்று, பின்னர் அதை பணிப்பெண்ணின் முதலாளியிடம் உறுதிப்படுத்தியது.
ஹோ கூறியதாவது; எம்மா என்றழைக்கப்படும் அந்த பணிப்பெண் காயங்கள் காரணமாக நேற்று ஜனவரி 29 அன்று இரவு 9 மணிக்குப் பிறகு உயிரிழந்தார்.
எம்மாவின் பிரேதப் பரிசோதனை இன்று காலை நடத்தப்பட்டது, மேலும் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைச் ஹோ மேற்கொள்கிறார்.
நாளை ஜனவரி 31ஆம் தேதி எம்மாவின் உடலைச் பெற்று, பிப்ரவரி 1ஆம் தேதி இந்தோனேசியாவில் உள்ள அவரது குடும்பத்தாரிடம் உடலை திருப்பி அனுப்பவும் ஹோ திட்டமிட்டுள்ளார்.