சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை அதிகாலை 4:40 மணியளவில் பிளாக் 39 Telok Blangah Riseல் நடந்த மூன்றாவது தீ விபத்து குறித்து நாம் முன்னர் பதிவிட்டோம்.
இந்நிலையில், 73 வயது முதியவர் ஒருவர் சம்பவத்தின்போது ஒழுங்கற்ற நடத்தையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
தீ 10 வது மாடி குடியிருப்பில் கொழுந்துவிட்டு எரிந்தது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும்போதே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ இடத்தில் பெண் ஒருவர் மயக்கமடைந்து தரையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக மீட்ட SCDF வீரர்கள், லிப்ட் லாபிக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) கொண்டு செல்லப்பட்டார். மற்றொரு நபரும் SGHக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 280 பேர் வெளியேற்றப்பட்டனர்.
வெளிநாட்டில் கணவருக்கு வேலை… மனைவியின் தகாத காதல் – இதனால் நேர்ந்த கொடூரம்…!