மார்கழி மாதம் இன்று (15/12/2022) தொடங்கியதையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் எந்தெந்த நேரங்களில் பூஜைகள் நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பை இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.
அதன்படி, சிங்கப்பூரில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்றான ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple), வாரத்தில் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 04.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரையும் திறந்திருக்கும். சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் கோயில் மூடும் நேரம் மாற்றங்களுக்கு உட்பட்டது.
தினமும் காலை 04.30 மணிக்கு கோயில் திறக்கப்படும். காலை 05.30 மணிக்கு ஸ்ரீ சிவன் அபிஷேகமும், காலை 05.45 மணிக்கு தனுர் மாத பூஜையும், காலை 06.15 மணிக்கு உஷ கால பூஜையும், காலை 08.00 மணிக்கு நித்திய பூஜையும் நடைபெறும். காலை 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 05.00 மணிக்கு ஸ்ரீ சிவன் அபிஷேகமும், இரவு 07.00 மணிக்கு இரண்டாவது கால பூஜையும், இரவு 08.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊழியர் மரணம்: கிரேன் விழுந்து உடல் நசுங்கிய சோகம் – முழு விவரம்
டிசம்பர் 16- ஆம் தேதி முதல் ஜனவரி 14- ஆம் தேதி வரை இந்த பூஜை நேரங்கள் நடைமுறையில் இருக்கும். அர்ச்சனை சேவைகள் காலை 11.00 மணி மற்றும் இரவு 08.00 மணிக்கு முடிவடையும் என்று குறிப்பிட்டுள்ளது.