சிங்கப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்றபோது வழியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த சிங்கப்பூர் தம்பதியின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பிளாக் 633 – ஹவ்காங் அவென்யூ 8 இல் உள்ள அவர்களின் வீட்டில் நடந்தது.
நேற்று மார்ச்.16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அவர்களின் உடல்கள் மாண்டாய் தகன இடத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, 8 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.
உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் முன்பின் தெரியாதோர் என நூற்றுக்கணக்கானோர் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடந்த மார்ச் 12ஆம் தேதி அன்று விமானம் மூலம் சென்னை சென்று அங்கிருந்து திருப்பதிக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி அருகே தர்மபுரம் கிராஸில் கார் சென்றுக் கொண்டிருந்த போது, எண்ணெய் நிரப்பிய டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
யுவராஜ் செல்வம் கட்டுமான மேலாளராகவும், அவரின் மனைவி நாகராஜ் வரதராஸ் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் விபத்தில் இறந்த இருவரின் உடல் சிங்கப்பூர் வந்தது.. இறுதிச்சடங்கு எங்கு?