சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்கு நற்செய்தி: “திருப்பதி – சிங்கப்பூர்” இடையே இனி பறக்கலாம்!

சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் ஓர் இன்பச் செய்தியை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது, திருச்சி வழியாக “சிங்கப்பூர் – திருப்பதி” மற்றும் “திருப்பதி – சிங்கப்பூர்” ஆகிய இரு வழித்தடத்திலும் பயணிகள் பயணிக்கலாம்.

OCBC வங்கியில் 5 ஆண்டுகளில் சேமித்த S$120,000 பணத்தை வெறும் 30 நிமிடங்களில் இழந்த சோகம் – தொடர்ந்து எச்சரிக்கும் வங்கி

அதாவது, 30+7 கிலோ லக்கேஜ், ஒரே PNRல் பயணிக்க முடியும் என்றும் Trichy Aviation தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு சிங்கப்பூர் இண்டிகோ அலுவலகத்தை அணுகும் படியும் அது கூறியுள்ளது.

Trichy Aviation/Twitter

இந்த விமான சேவை ஜன 18 முதல் செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை கார், மற்றொரு காரில் மோதி விபத்து (வீடியோ): கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் மரணம்