சிங்கப்பூரில் லாரி மோதி ஊழியர் மரணம் – தொடரும் உயிரிழப்புகள்

traffic-controller death lorry accident

சிங்கப்பூர்: லிம் சூ காங்கில் லாரி மோதிய விபத்தில் சிக்கிய 72 வயதான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த ஆக.16 ஆம் தேதி 150 Neo Tiew ரோட்டிலுள்ள Chew’s Agriculture நிர்வகிக்கும் பண்ணையில் காலை 7.30 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடையில் திருட்டு வேலை… CCTV வீடியோவில் மாற்றிய ஊழியரை தேடிவரும் போலீஸ்

பண்ணையால் வேலைக்கு அமர்த்தப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரான அவர், லாரி இடது புறத்தில் இருந்தபோது லாரி முன்னோக்கி எடுக்கப்பட்டதில் மோதி விபத்துக்குள்ளானார்.

இதனை அடுத்து, அவரை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், கடும் காயம் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி மரணித்தார்.

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் இதுவரை 34 வேலையிட விபத்துகள் நடந்தது.

சமீபத்தில் பங்களாதேஷ் ஊழியர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிராங்கூன் லிப்ட்டில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர் – 2 மணிநேரத்திற்குள் அதிரடி கைது