இந்த தவறை செய்யலாமா? ரொம்ப தப்பு – வெளிநாட்டு ஆடவருக்கு சிறை!

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

சிங்கப்பூரில் மூன்று போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முயற்சி செய்த வெளிநாட்டு ஆடவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளுக்கு S$100 லஞ்சம் கொடுக்க முயன்றதாக 38 வயதான அவருக்கு எட்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வீட்டை உடைத்து S$30,000 மதிப்புள்ள 4 மதுபாட்டில்களை திருடிய மூவர்.. ஐந்து மணி நேரத்திற்குள் அதிரடி கைது

சீன நாட்டவரான ஹான் ஷோலு என்ற ஊழியர், 2019ஆம் ஆண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தில் பிடிபட்ட அவர், அதிலிருந்து தப்பிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்டுள்ளது.

மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஐந்து நாள் தொடர் விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஊழல் குற்றத்திற்கும், S$100,000 வரை அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

“சிறுநீர், மலம் கழிக்க கூட என் மகன் தான் உதவி” – 22 ஆண்டுகளாக தாயை கவனித்து வந்த மகன் தூக்கத்திலேயே மரணம்… வங்கிக் கணக்கில் $6 மட்டுமே; எனக்கு இனி யார் இருக்கா? கண்ணீருடன் தாய்