சிங்கப்பூரில் இருந்து செல்லும் பயணிகள் தனிமைப்படுத்தலின்றி இனி இந்த பகுதிகளுக்கு செல்லலாம்

(Photo by David GRAY / AFP)

சிங்கப்பூரில் இருந்து செல்லும் பயணிகள், இனி தனிமைப்படுத்தலின்றி பத்தாம் மற்றும் பின்டன் தீவுகளுக்குள் நுழையலாம்.

இதனை, இந்தோனேசியாவின் பொருளாதார ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏர்லாங்கா ஹர்டடோ இன்று (ஜன. 24) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சிலோசோ கடற்கரையில் பெண்களை தவறாக ரகசிய படம் எடுத்து சிக்கிய ஆடவர்.. கொந்தளித்த பெண்கள்!

இருப்பினும், வருகையாளர்கள் Travel bubble என்னும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பவர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ளலாம்.

மேலும் அவர்களின் பயண விவர முன்வரைவின்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

பத்தாம் மற்றும் பின்டனில் சுற்றுலாவை தொடங்குவதற்காக இந்த ஏற்பாடு அறிவிக்கப்பட்டதாக ஹர்டடோ கூறினார்.

மேலும், அந்த இரண்டு தீவுகளிலும் கோவிட்-19 பாதிப்பு நிலைமை சீராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

“அழகு சாதனப் பொருள்” என கடத்தப்படவிருந்த போதைப்பொருள் – சோதனையில் சிக்கிய 24 வயது பெண்