சிறந்த ஊதியம் மற்றும் வேலை வாய்ப்புடன் சிங்கப்பூர் விமானத்துறையில் வாய்ப்பு – Ng

சிங்கப்பூரில் Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு ,பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதால் ,அடுத்த 2 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறையில் ” சிறந்த வேலை மற்றும் சிறந்த ஊதியத்தை எதிர்பார்க்கலாம் ” என்று (NTUC) பொதுச் செயலாளர் Ng Chee Meng சனிக்கிழமை அன்று (May7) கூறினார்.

சிங்கப்பூரின் விமான மையத்தை மீட்டெடுப்பதற்காக ஆதரவளித்த பணியாளர்களை அங்கீகரிப்பதாக நடைபெற்ற மே தின விழாவில் பேசிய Ng கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் துறை மோசமான காலங்களை எதிர்கொண்டிருப்பதாக கூறினார்.

தற்போது மீட்புக்கு மத்தியில் விமான போக்குவரத்து பணியாளர்கள் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக அதிக வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணியாளர்கள் மகிழ்ச்சியான பிரச்சனையை எதிர்கொள்வதாக கூறினார்.

தொழிலாளர்கள் 6 மாதங்களில் பணிக்கு திரும்பும் போது அவர்களை வரவேற்கும் போது சிறந்த வணிகங்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புவதாக கூறினார்.மேலும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை புரிந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் அதன் எல்லைகளை முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு மாதத் தொடக்கத்தில் மீண்டும் திறந்தபிறகு ஏப்ரல் மாத இறுதியில் சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரித்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 50 சதவீதத்திற்கு மீட்டெடுக்க சிங்கப்பூருக்கு இது இலக்கு வைத்துள்ளது.

Friends for aviation கடந்த ஆண்டு ஜூன் மாதம் 70 CAAS அதிகாரிகளைக் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டது. மேலும் பல முயற்சிகளை அறிமுகப்படுத்தியது.