தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். குறிப்பாக, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681, IX 685, IX 689 ஆகிய விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவை Non- VTL ஆகும். எனவே, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகள் கட்டாயம் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியாவிலுள்ள முக்கிய கிளையை மூடும் பிரபல கோமளாஸ் உணவகம்!
இந்த நிலையில், திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான மே மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், இண்டிகோ ஏர்லைன்ஸ், விஸ்தாரா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தொடர்ந்து VTL, Non- VTL விமானங்களை இயக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.