திருச்சி விமான நிலைய கழிவறையில் 840 கிராம் தங்கம் – வெளிநாட்டு பயணிகள் மீது சந்தேகம்!

Singapore Trichy flight

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விமான நிலைய ஊழியர் ஒருவர் திருச்சி விமான நிலையம் உள்ளே உள்ள கழிவறையை சுத்தம் செய்துள்ளார்.

சிங்கப்பூரில் சாம்பியனாக துடிக்கும் இந்திய ஊழியர்.. அதிக வேலை நேரத்தின் மத்தியிலும் உடற்பயிற்சி!

அப்போது கழிவறையில் சுமார் 40 லட்சம் இந்திய மதிப்புள்ள 840 கிராம் தங்கத்தை அவர் கண்டார்.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர், உடனடியாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் தாம் நகைகளை கண்டது குறித்து தகவல் தெரிவித்தார்.

பின்னர், அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் அனைத்து தங்கத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து வெளிநாடுகளில் இருந்து வந்த மர்ம நபர் கடத்தல் தங்கத்தை கழிவறையில் விட்டுச் சென்றது தெரியவந்தது.

மேலும் சிசிடிவி காணொளி காட்சிகள் உதவியுடன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ங் மோ கியோ பிளாட்டில் தீ.. பெண் ஒருவர் உயிரிழப்பு