‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- ஆகஸ்ட் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

 

டாடா குழுமத்திற்கு (Tata Group) சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express), தமிழகத்தில் திருச்சி, மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகின்றது. எனினும், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

போக்குவரத்து போலீசாரின் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து: ஆடவர் மரணம்

கொரோனாவுக்கு பிறகு தற்போது விமான போக்குவரத்துத்துறை வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால் வழக்கத்தை விட அதிக பயணிகள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இதனால் விமான நிறுவனங்கள் லாபத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் ஊழியரின் திருமணம்… அறந்தாங்கி வந்த சிங்கப்பூர் முதலாளி, மேலாளர் – விழாக்கோலம் பூண்ட கிராமம்

விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.com/home என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.