திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681 என்ற விமானத்தையும் இயக்கி வருகிறது.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியாவுக்கு செல்கிறார் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்!
இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோடைக்கால விடுமுறை நாட்கள் தொடங்கியுள்ளதாலும், இந்தியாவில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருவதாலும், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காணாமல் போனவர் என புகார் பதியப்பட்ட நபர் சடலமாக மிதந்த நிலையில் மீட்பு
இந்த வழித்தடத்திற்கான மார்ச் முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலான விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் https://www.airindiaexpress.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.