‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சிங்கப்பூரில் தமிழ் பணிப்பெண், ஊழியருடம் முதலாளி வீட்டில் உல்லாசம் – உடைந்துபோன முதலாளி.. “வீட்டில் ஒருவராக அனைத்தும் செய்தேன்” என வேதனை

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681 என்ற விமானத்தையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த விமான சேவை பயணிகளிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது விநாயகர் சதுர்த்தி முடிந்துள்ள நிலையில், ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளது. இதனால், சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள், தமிழகம் திரும்பி தங்களது குடும்பத்துடன் பண்டிகைகளைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளன. இதனால் திருச்சி, சிங்கப்பூர் இடையே செப்டம்பர் முதல் வரும் டிசம்பர் மாதங்கள் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் “வெந்து தணிந்தது காடு… படத்துக்கு இப்போவே ஒரு டிக்கெட்டை போடு” – Book Now

விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக திருச்சி, சிங்கப்பூர் வழித்தடத்தில் கூடுதல் விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் பயணிகள்.